பெண்கள் பொங்கல் படையலிட்டு அம்மனைக் கொண்டாடும் திருவிழாவே வருடத்தில் மிகப் புகழ்பெற்ற நிகழ்வு ஆகும். மண்பானையில் அரிசியை சமைத்து பொங்கலாக்கி தெய்வத்தைக்கு படையலிடப்படுகிறது. மிக எளிமையாகவும் அன்புடனும் செலுத்தும் இந்த பொங்கல் படையலானது வழக்கமாக அறுவடை முடிந்த பின்னர் நடக்கும். இந்தப்பொங்கல் திருவிழா ஆணி மதம் (ஜூன்) மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். |
தமிழர்களின் போர் கடவுளான முருகப்பெருமானை போற்றும் வகையில் கொண்டாடப்படும் திருவிழா காவடி ஆகும். பக்தர்கள் தாங்கள் நேர்ந்த நேர்த்தியை பூர்த்திசெய்வதற்க்காக முருகக்கடவுளின் கோவிலுகளுக்கு யாத்திரை செல்வர். சிலர் பால்குடம் அல்லது குடத்தில் பானகம் (முருகப் பெருமான் விரும்பும் தண்ணீர், ஏலக்காய், சுக்கு, எலுமிச்சை மற்றும் சர்க்கரை கலந்த குளிர் இனிப்புத் தண்ணீர்) எடுத்துக்கொண்டு நீண்டதூரம் நடந்து யாத்திரை செல்வர். சிலர் தமது தோள்களில் காவடியை (மரத்தால் செய்யப்பட்ட வளைவை மயிலின் இறக்கைகளால் அலங்கரித்து இருமுனையிலும் சிறிய பால் குடம் பிணைக்கப்பட்டிருக்கும்) ஏந்திச் செல்வர். காவடி எடுப்பதன் மூலம் தெய்வீக அருள் கிட்டும். சிலநேரங்களில் பக்தர்கள் தமது உடம்பில் வேலை குத்தி உடல் சார்ந்த வலியினை கடந்த நிலையை உணர்வர். காவடி எடுக்கும் வேளையில் மயக்கம் அடைவதும் தன்னை மறந்த நிலையை அடைந்து எதிர்காலத்தை கண்டிப்பதும் இயல்பு. இக்காவடிக் கொண்டாட்டம் வல்- மோரின் சுப்பிரமணியா ஐயப்பன் கோவிலில் ஜூலை மாதம் நான்காம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். |