எமது ஆசான்கள்
சுவாமி சிவானந்தா இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த யோகா ஆசிரியர்களில் ஒருவர். சிவானந்த யோகா வெதாந்த அமைப்பின் தொடக்கதிற்கான காரணகர்த்தா இவர்தான்.
இளமைப் பருவம்
சுவாமி சிவானந்தா 1887 ஆம் ஆண்டு, தென்இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பத்தமடை
என்ற ஊரில் பிறந்தார். இவரது இயற்பெயர் குப்புசாமி. சிறுவயதில் படிப்பில் மட்டுமல்லாமலாது சீறுடற்பயிர்சிகளிலும் வல்லுனராக திகழ்ந்தார். அத்துடன் ஆன்மீகம் மற்றும் சமய நடைமுறைகளிலும் மிகுந்த ஈடுபாடு காட்டினார்.
அவரது பெற்றோற்கள் சிவன் வழிபாட்டிற்காக தங்களை அற்பணித்திருந்தார்கள். குப்புசாமியும் மிகுந்த ஆர்வதுடன் தினமும் இரண்டு முறை வழிபாடுகளிலும் கீர்த்தனை பாடுவதிலும் அவர்களுடன் செர்ந்துகொள்வார். அவரது தன்னலமற்ற உள்ளம் மருத்துவ படிப்பை நோக்கி வழிகாட்டியது. அவரது ஆழ்ந்த ஆர்வமும், பாடங்களை இலகுவாக புரிந்துகொள்ளும் தன்மையும் அவரின் பேராசிரியர்களின் மதிப்பையும் மரியாதையும் பெற்றுத்தந்தது. இதனால் இவரின் முதாலாம் ஆண்டு படிப்பின் பொதே அறுவை சிகிச்சைகளில் கலந்து கொள்ள அழைத்தார்கள்.
மருத்துவர் குப்புசாமி
இளம் மருத்துவர் குப்புசாமிக்கு மலேசியா செல்லவேண்டும் என்ற வலுவான தூண்டல் எழுந்தது. அங்கு மிக முக்கியமான தேவை இருப்பதை உணர்ந்தார். மிக குறுகிய காலத்திலே ஒரு மருத்துவமனையின் தலைமை பொறுப்பை பெற்றார். இந்த காலகட்டத்திலே மிக சிறந்த மருத்துவர் என்றும் அதில் மாற்று கருத்தற்ற மனிதாபிமானி எனவும் புகழ் பெற்றார். பெரும்பாலும் பணவசதி அற்ற தன் நோயாளிகளிடம் ஆலோசனைக்கான கட்டணத்தை தள்ளுபடி செய்தார். பல நேரங்களில் நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகளை வழங்கினார்.
ஒரு நாள் பிரயாணத்தின் போது ஒரு சந்நியாசியை குணப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்தது. யோகா மற்றும் வேதாந்தம் பற்றிய போதனை சந்நியாசியிடமிருந்து மருத்துவர் குப்புசாமிக்கு கிடைத்தது. அந்த நாளில் இருந்து அவரின் வாழ்க்கை பாதை மாறியது. படிப்படியாக மருத்துவர் குப்புசாமி தன்னிலை பற்றி ஆராய தொடங்கினார்.
அவரால் வாழ்க்கையில் பெரிய கேள்விகளை ஆராயாமல் இருக்க முடியவில்லை. அப்போது மனிதர்களுக்கு மிக ஆழ்ந்த நிலையில் உதவி செய்ய வேண்டும் என எண்ணினார். அவர்களின் சரீரம் மட்டுமல்லாமல், எல்லா துன்பங்களிக்கும் சிகிச்சையளிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றியது.
தலைசிறந்த சந்நியாசி சுவாமி சிவானந்தா
ஆன்மிக வளர்ச்சியிலும் ஞானம் அடைவதிலும் மிகுந்த ஆர்வம் நிறைந்த குப்புசாமி தனது குருவை தேடி வட இந்தியா சென்றார் .வாரணாசியில் சிறிது காலம் இருந்துவிட்டு இமய மலையை நோக்கிச் சென்றார். அங்கு புனித நகரமான ரிஷிகேசத்தில்(சாதுக்களின் குடியிருப்பு ), தனது குருவை கண்டறிந்தார் அவரிடம் சந்நியாசம் பெற்று சுவாமி சிவானந்த சரஸ்வதி என்ற நாமம் பெற்றார் .10 வருடமாக தினமும் இறைவனை நினைத்து தவமிருப்பதையும் சமய அனுட்டானங்களையும் கடைப்பிடித்தார் .அக்கால கட்டத்தில் அவரின் ஆன்மிக உத்வேகம் சக சந்நியாசிகளை அவரின் பக்கம் ஈர்த்தது .
மகான் சுவாமி சிவானந்தா
அதன் பிறகு ஈடு இணையற்ற பயன்தரு யோகா ஆசிரியராக உருவெடுத்தார். தான் இருந்த சிறிய நகரான ரிஷிகேசத்தை விட்டு இரண்டு முறை மட்டுமே இந்தியாவினுள் யாத்திரை சென்றார். ஆனாலும் அவரின் போதனைகள் உலகம் முழுவதும் மிக விரைவில் பரவி புகழ் பெற்றன. எந்தவித இயந்திர உதவி இன்றி தனது கையாலே யோகாசனம் மற்றும் தத்துவவியல் தலைப்புகளில் 200 இக்கும் அதிகமான புத்தகங்களை எழுதினார். அவரது எழுத்து வடிவம் ஆன்மிக சக்தி வாய்ந்ததாகவும், நேரடியானதாகவும் இருந்தது.இந்த புத்தகங்களை வாசித்த பலர் அவை தங்களின் வாழ்வை ஆழமாக தொட்ட்தாகவும், தம்மை மாற்றியதாகவும் நம்பி உலகமெங்கிலும் இருந்து அவரது திருவருளை பெறும் நோக்கில் நேரடியாக அவரிடம் வர தொடங்கினர்.
அவரது போதனைகளை கீழ் கண்ட சொற்களில் தொகுத்துரைக்கலாம்.
சேவை, அன்பு, தானம், தூய்மை, தியானம், உணர்தல்.
சர்வதேச சிவானந்தா வேதாந்தா நிலையத்தின் நிறுவனரான சுவாமி விஷ்ணுதேவநந்தா ஹத மற்றும் ராஜ யோகங்கள் உலகளாவிய நிபுணர் ஆவார். உலகெங்கும் அவர் ஈட்டிய மாறுபட்ட சமாதான விளக்குகளால் “பறக்கும் சுவாமி” என்றும் “சமாதான பறவை” என்றும் பட்டப்பெயரை பெற்றார்.
யோகத்தை கண்டறியும் முன்
சுவாமி தென்னிந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்தில் 1927 ஆம் ஆண்டு பிறந்தார். சிறுவயதில் அவரது குணாதிசயங்களில் முக்கியமான ஒன்றானது அவரது வலிமையான மனத்திட்பமும் மனா உறுதியும் ஆகும். மாதாஜி என்றுஅழைக்கப்படும் அவரது தாயார்(அவருக்கு பின்னர் சன்யாசம் பெற்றவர்), தனது மகன் ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று எண்ணி விட்டால் எதுவுமே யாவருமே அவரை தடுக்க முடியாது என்று கூறியிருந்தார். அவரது வாழ்க்கையில் சுவாரசியமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக கருதப்படும் கதை பின்வருமாறு:
ஐந்து வயதில் பாடசாலைக்கு சென்று படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். அருகில் இருக்கும் பாடசாலை ஐந்து மயிலுக்கு அப்பால் உள்ளதால், அவரது எண்ணம் நிறைவேறாது என சொல்லப்பட்டது. அச்சிறுவயதிலேயே அதிகாலையில் எழுந்து புத்தகங்களை அடுக்கி வைத்து காட்டின் ஊடாக ஐந்து மையில்கள் நடந்து செல்லும் பொறுப்பை எடுத்து கொண்டார். அன்று மாலை நடந்தே வீடு திரும்பினார். இதையே பல வருடங்கள் தொடர்ந்து செய்தார்.
இளமையில் பல்கலைக்கழகம் சென்று படிப்பதற்கு பணவசதி இன்மையால் இராணுவத்தில் சேர்ந்து தான் விரும்பிய விஞ்ஞானக் கல்வியைப் பெற்றார்.
இந்த காலகட்டத்தில் தொலைந்த காகிதம் ஒன்றை குப்பையில் தேடும்போது அவரது கண்களில் சுவாமி சிவானந்தாவின் ‘இருப்பது ஆன்மீக போதனைகள்’ என்ற தலைப்புடனான எழுத்தாக்கம் காணப்பட்டது. அந்த துண்டு பிரசாரம் ‘ஒரு அவுன்ஸ் பயிற்சி பெருமளவு கோப்பாட்டை விட சிறந்தது’. காலத்தின் தேவைக்கேற்ப இருந்த இந்த எளிய வார்த்தைகளின் சக்தி அவரை சுவாமி சிவானந்தாவைத் தேடி, தனக்கிருந்த 36 மணிநேர விடுமுறையில் இமய மலையை நோக்கி செல்ல வைத்தது. இந்த சிறுபயணம் மனதில் ஆழமாக பதிந்ததால் திரும்பவும் வரவேண்டும் என திடமான முடிவை எடுத்தார்.
ஆசானை சந்தித்தல்
அவரது இரண்டாவது பயணத்தின் போது இந்த இளம் மாணவர் சுவாமி சிவானந்தாவிடம் இருந்து இரண்டு முக்கியமான படிப்புகளை பெற்றார். சுவாமி சிவானந்தாவின் பாதங்களை பணிய தனது பயம் மற்றும் அகந்தை காரணமாக மறுத்த போது முதலாவது படிப்பினை கிடைத்தது. ஆதலால், குரு சிவானந்தா தனது இளம் மாணவர் முன் அஷ்டாங்க(8 அங்கங்களும் நிலத்தில் படும்படி) வணக்கம் செய்து பணிவு என்ற படிப்பினையை புகட்டினார். கங்கை நதிக்கு ஆரத்தி செய்யும் போது இரண்டாவது படிப்பினை கிடைத்தது. விஞ்ஞான ரீதியில் வெறுமன H2O என கண்டறியப்பட்ட ஆற்றினை எதற்க்காக அறிஞ்சர் வழிபடுகின்றனர் என்ற குழப்பத்திலும் சந்தேகத்திலும் இருந்தார். சுவாமி சிவானந்தா ஒரு சிறு புன்முறுவலுடன் சுவாமி விஷ்ணுதேவானந்தாவைப் பார்த்தார். அதன் பிறகு சுவாமி சிவானந்தா அச்சிறுவனை ஆசிரமத்தில் தங்கி பயின்று யோகியாகவருமாறு அழைத்தவுடன் ஐவரும் ஆம் என்று சென்றார்.
பயிற்சி
அடுத்த 10 வருடங்களை சிவானந்தா ஆசிரமத்தில் இருந்து சுவாமி சிவானந்தாவிடம் இருந்து யோகாவின் எல்லா நுணுக்கங்களையும் கற்றறிந்தார். சிறுவயதிலேயே ஹத யோக நிபுணராகவும் முனைப்புடன் கூடிய ஓய்வற்ற கர்ம யோகியாகவும் உருவெடுத்தார். ஒருநாள் சுவாமி சிவானந்தா பத்து இந்திய ரூபாயையும் தனது ஆசிகளையும் அளித்து மேற்கு நோக்கி பயணித்து வேதாந்த தத்துவங்களை பரப்பவும் என்றார். மக்கள் காத்திருக்கிறார்கள் என்பதே அவர் கூறிய சொற்கள்.
உலக ஆசானாக சுவாமி
சுவாமிஜியின் அளவற்ற ஆற்றலும் ஆழ்ந்த அகத்தூண்டலும் அவரை சர்வதேச சிவானந்தா யோகா வேதாந்த நிலையங்களைத் தொடங்கி நடத்த வைத்தது. சர்வதேச சிவானந்தா யோக வேதாந்த நிலையங்கள் இன்று உலகமெங்கும் இருபது நிலையங்களும் ஒன்பது அசிரமங்களுடனும் பல இணைந்த நிலையங்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டும் இயங்குகிறது. சுவாமி யோக ஆசிரியர் பயிற்சி பாடநெறியை உருவாக்கினார். பண்டைய மறந்த யோக போதனைகளை புரிவதற்கு எளிதான ஐந்து கோட்பாடுகளின் சாராம்சமா எடுத்து உரைத்தது இவரின் சாதனைகளில் ஒன்று. இந்த கோட்பாடுகளை ஒருவரின் தினப்பயிற்சியில் இலகுவாக சேர்த்து கொள்ள முடியும்.
பறக்கும் சுவாமியும் அவரது சமாதனப் பணிகளும்
1969 ஆம் ஆண்டு சுவாமி தனது முன்னோக்கு பார்வையின் மூலம் உலகம் நெருப்பில் மூழ்குவதாகவும் மக்கள் அனைவரும் எல்லைகளை பாராமல் எல்லா திசையிலும் தெறிக்க ஓடுவதாகக் கண்டார். மக்களின் மனதில் உள்ள தேசம், அரசியல் மற்ற பிற எல்லைகள் அனைத்தும் உலக அமைதியை அடைவதற்கு தடையாக உள்ளன. இத்தடையை அகற்ற உண்மையான உலக ஒழுங்கை உருவாக்கினார்.
அவர் யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறியை உருவாக்கினார். இக்காலத்தில் இதன் மூலன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை இந்த அமைப்பு உருவாக்கியுள்ளது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உலகமெங்கும் யோகத்தின் நன்மையை பரப்பிவருகின்றனர். சுவாமி விஷ்ணுதேவானந்தா யோகா ஒழுக்கங்களை பரப்பும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் அனுசரணை செய்தும் உதவினார். அமைதியை பரப்ப அவர் மேற்கொண்ட பணிகளில் மிகச்சிறந்த பணி 1971 ஆம் ஆண்டு நடைபெற்றது. தனது விமானத்தில் உலகமெங்கும் மலர்கள் மற்றும் சமாதான சிற்றேடுகளைத் தூவினார். பெல்ஃபாஸ்ட், சூயஸ் கால்வாய், ஜெருசலேம், லாகூர் மற்றும் வங்காளத்தில் சுவாமி விஷ்ணுதேவானந்தா மலர்கள் மற்றும் சமாதான சிற்றேடுகளை எறிந்தார். சுவாமியின் விமானம் ஓவியக்கலைஞர் பீட்டர் மாக்ஸ் உதவியுடன் வர்ணம் தீட்டப்பட்டது. இப்பொழுதும் அந்த விமானம் வல்- மொரினில் உள்ள சிவானந்தா யோக முகாமில் உள்ளது.
சுவாமி விஷ்ணுதேவானந்தா உலகெங்கும் யோக மையங்களையும் ஆசிரமங்களையும் நிறுவினார். அவர் நடத்திய சில யோக மாநாடுகள் பின் வருமாறு: சர்வதேச யோக ஆசிரியர் மகாசபை, அனைத்து குருக்களின் விழா, யோகா மற்றும் மனித மனத்தின் கண்டுபிடிப்பு, மனிதனும் அவனது எதிர்காலம், இயற்பியல் மற்றும் மனோதத்துவம், உள் ஒளியின் கொண்டாட்டம், மற்றும் 21 ஆம் நூற்றாண்டில் நிலைத்திருப்பது. இந்த மாநாடுகள் ஒவ்வொரு வருடமும் அனைத்து சிவானந்தா ஆசிரமங்களில் நடைபெற்றுவருகிறது.
1978 ஆம் ஆண்டு சுவாமி விஷ்ணுதேவானந்தா தியானமும் மந்திரங்களும் என்ற புத்தகங்களை வெளியிட்டார். அந்த புத்தகத்தை பல மொழிகளில் மொழி மாற்றம் செய்யது மறுபதிவு செய்யப்பட்டது. அந்த வருடம் முழுவதும் சுவாமி விஷ்ணுதேவானந்தா அமைதியான தியானத்தில் இருந்து 1979 ஆம் ஆண்டு மீண்டும் கதைக்கத்தொடங்கியதோடு கர்மம் மற்றும் நோய்கள் எனும் புத்தகத்தை எழுதி சொற்பொழிவும் செய்தார். அத்தோடு 21 ஆம் நூற்றாண்டில் நிலைத்திருப்பது எப்படி என்றும் அணு ஆயுதக் குறைப்பு பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பெர்லின் சுவர் மீது 1983 ஆம் ஆண்டு மேற்கில் இருந்து கிழக்கிற்கு பறந்தார். உலக கிராம அமைதிக்கான விழாவை பெர்லின் சுவரின் அருகில் வைத்ததோடு சூடான நிலக்கரியின் குறுக்கே 60 பெயருக்கும் மேல் முன்னடத்தி சென்றார்.அதே வருடம் சிவானந்தாவின் துணையுடன் யோகம் என்ற புத்தகத்தையும் வெளியிட்டார். அவரது சமாதானப் பணியை இந்தியாவுக்கு கொண்டுவந்ததோடு இரட்டை தளங்களைக் கொண்ட பேருந்தில் பயணம் செய்து யோக மரபின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். சுவாமி விஷ்ணுதேவானந்தா சீக்கிய தலைவர்களை சந்தித்து அவர்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் பேச்சு வார்த்தையை ஏற்படுத்த முயன்றார். 1987 ஆம் ஆண்டு சுவாமி சிவானந்தாவின் 100 ஆவது பிறந்தநாளுக்கு இந்திய முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சுவாமி சிவானந்தாவின் வேதங்களின் கருத்து விளக்கம் மற்றும் ஹத யோக ப்ரதிபிகாவின் சுவாமியின் விளக்கவுரையும் வெளியிடப்பட்டது. சில வருடங்களுக்குப் பின்னர் கர்மம் மற்றும் நோய்கள் என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது. என்பதாவது ஆண்டுகளில் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சொற்பொழிவுகளை நிகழ்த்தியவாறு யோக மையங்கள் மற்றும் அசிரமங்களின் எண்ணிக்கையை அதிகரித்தார். சுவாமி விஷ்ணுதேவானந்தா பல கோவில்களையும் இந்த இடங்களில் துவக்கிவைத்தார்.
சுவாமி விஷ்ணுதேவானந்தாவின் “ஓம் நமோ நாராயணாய” என்ற சமாதான பிரச்சாரம் 1991 ஆம் ஆண்டு ஏற்பாடுசெய்யப்பட்டது. உலக மக்கள் அனைவரும் “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை உச்சரித்தும் எழுதியும் வந்தனர். மந்திரங்களை எழுதிய புத்தகங்கள் இமய மலையில் உள்ள விஷ்ணு சிகரத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியம் குன்றிய நிலையில் இருந்த பொழுதும் கங்கை நதியின் நீளத்திற்கு(கோமுகி முதல் கொல்கத்தா வரை) புனித பயணம் மேற்கொண்டார்.
உலகெங்கும் இருக்கும் யோக மையங்கள் மற்றும் அசிரமங்களின் மூலம் சுவாமி விஷ்ணுதேவானந்தாவின் சமாதானப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.